சுரேஷைக் கழற்றி விட்டு விட்டு சுதாமோனுடன் ஓடிய 2 பெண் குழந்தைகளின் தாய்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13, 10 வயதில் உள்ள இரு பெண் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு கணவரையும் தூக்கிப் போட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார் ஒரு பெண்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷோபனா. இவரது கணவர் பெயர் சுரேஷ். கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர்களுக்க சபி என்ற 13 வயது மகளும், ஷாலி என்ற 10 வயது மகளும் உள்ளனர். இவர்கள் முறையே 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு ஷோபனா திடீரென மாயமாகி விட்டார். குழம்பிப் போன சுரேஷ் பல இடங்களில் தேடிப் பார்த்தால் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார். தனது புகாரில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுதாமோன் என்பவருடன் தனது மனைவிக்குப் பழக்கம் இருந்ததாகவும், அதை தான் கண்டித்துள்ளதாகவும் கூறியிருந்தார். சுதாமோனையும் வீ்ட்டில் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுதாமோனின் தந்தை உள்பட 3 பேரை விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications