For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண் மீது போலீஸ் வெறித் தாக்குதல்.. கலெக்டர் அறிக்கை கொடுப்பார்.. மொட்டையாக பதிலளித்த ஜெயக்குமார்!
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்ட போது கலெக்டர் அறிக்கை கொடுப்பார் என்று மொட்டையாக பேசிவிட்டு சென்
திருப்பூர்: டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து நிதி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளது என்றும் கலெக்டர் அறிக்கை கொடுப்பார் என்றும் மொட்டையாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
Comments
English summary
Minister Jayakumar has given irresponsible answer about police attacking on woman in Tirupur anti Tasmac protest.