இறுதிக் காரியத்திற்கு பீரோவில் பணம் வைத்து விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த பெண் வங்கி மேலாளர்!
ஈரோடு அருகே பெண் வங்கி மேலாளர் தனது தாய் தந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஈரோடு: இறுதிக் காரியம் செய்ய பீரோவில் பணத்தை வைத்து விட்டு தனது தாய், தந்தையுடன், ஒரு இளம் பெண் வங்கி மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதை விட கொடுமை என்னவென்றால் அப்பெண்ணுக்கு திருமணம் பேசி முடிவெடுத்துள்ளனர். நிச்சயதார்த்ததிற்கு சில நாட்களே இருந்த நிலையில் இந்தத் தற்கொலை முடிவை அப்பெண் எடுத்துள்ளதுதான் மிகப் பெரிய சோகமாகும்.

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பெயர் ராதாமணி. இவர்களுக்கு ஒரே மகள் கிருத்திகா. 31 வயதான கிருத்திகா தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய வங்கி திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ளது. மனோகரன் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கிருத்திகாவுக்கும், பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. 6ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவாகி அதற்கான வேலைகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கிருத்திகா தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு விட்டார். விஷம் அருந்திய நிலையில் 3 பேரும் வீட்டில் பிணமாகக் கிடந்தனர். சாவதற்கு முன்பு உறவினர்களுக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார் கிருத்திகா. அதில் பீரோவில் இறுதிக் காரியத்திற்குத் தேவையான பணம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. தங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று இன்னொரு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. குடும்பத் தகராறா, கடன் தொல்லையா என்ன என்று தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications