மதுரை காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்த பெண் காவலரின் கணவர் சரண்!
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் கருப்பாயியின் கணவர் திருச்சி போலீஸில் சரணடைந்துள்ளார். இதற்கிடையே, கருப்பாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புதுப் புகாரைக் கூறியுள்ளனர்.
மதுரை, திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் கருப்பாயி (28). இவர் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் பெத்தண்ணசாமி (32) என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெத்தண்ணசாமி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் பெத்தண்ணசாமி ஊருக்கு வந்தார். அப்போது அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கருப்பாயியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். விடுமுறை முடிந்தும் அவர் பணிக்குத் திரும்பவில்லை. வீட்டிலேயே இருந்தார். தினமும் குடித்தார். மனைவியுடன் சண்டை போட்டு வந்தார். இதனால் கருப்பாயி பெரும் வேதனையிலும், மன உளைச்சலிலும் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் இன்று காலையில் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் கருப்பாயி. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பாயி மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் புகார்
இந்த நிலையில் கருப்பாயி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் பிரச்சினை எழுப்பியுள்ளனர். கருப்பாயி பயன்படுத்திய துப்பாக்கி காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியாகும். அது எப்படி கருப்பாயிக்கு கிடைத்தது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சந்தேகத்தை எழுப்பி அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். உடலையும வாங்க மறுத்தனர்.
திருச்சி போலீஸில் சரணடைந்த கணவர்
இதற்கிடையே கருப்பாயியின் கணவரான பெத்தண்ணசாமி, திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications