For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடித்து விட்டு 9 பேருடன் கும்மாளம்... பலாத்காரம் என்று பொய் புளுகிய பெண்!

Google Oneindia Tamil News

Woman creates 'gang rape' flutter in Madurai
மதுரை: மதுரையே அலறிப் போய் நிற்கிறது.. ஒரு பெண் சொன்ன பாலியல் பலாத்காரப் புகாரால்.. தன்னை 9 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறிய அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்தபோது போலீஸார் உண்மையை அறிந்து ஆடிப் போயுள்ளனராம்.

இந்தப் பெண் ஒரு தறி கெட்ட நடத்தை கொண்டவர். தாறுமாறான உறவுகளில் திளைத்து வந்தவர். சம்பவத்தன்றும் இவர் 9 பேருடன் சரமாரியாக உல்லாசமாக இருந்துள்ளார். முட்ட முட்ட மது அருந்தியுள்ளார். கடைசியில் தன்னை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்து விட்டதாக பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார்.

நடந்த விஷயங்களை விசாரணையில் அறிந்து போலீஸார் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நடந்தது என்ன...?

மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். உடைகள் அலங்கோலமாக இருந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர் அப்பகுதி மக்கள்.

போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலில் இவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் என்றும், நர்ஸிங் படித்து வந்தவர் என்றும், பிரகாஷ் என்ற செல்போன் காதலனை நம்பி மதுரைக்கு வந்து பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளானார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளியான விவரமே வேறு. கேட்பவர்களுக்குத் தலை சுற்றிப் போய் விடும்.

மதுரைக்காரப் பெண்

இவர் மதுரையைச் சேர்ந்தவர். வீடு குலமங்கலம், சாலையில் உள்ள எஸ் ஆலங்குளத்தில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள். பெயர் பழனியம்மாள். வயது 28 ஆகிறது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்தார் பழனியம்மாள். அவர் மூலம் 3 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் அதன் பின்னர் கணவரை விட்டுப் பிரிந்தார் பழனியம்மாள். அதே பகுதியில் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்யத் தொடங்கினார். அப்போது தாறுமாறான சகவாசத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அப்படிப்பட்ட பழக்கத்தில் அறிமுகமானவர்தான் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ். இவருடன் ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து மதுரைக்கே வந்து விட்டார் பழனியம்மாள். தனது பெற்றோருடன் தங்கினார். ஆனால் எப்போது பார்த்தாலும் ஊர் சுற்றி வந்தார். எப்போதும் ஆண்களுடன்தான் இருப்பாராம்.

5 பேருடன்

சம்பவத்தன்றும் அவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு வைத்து சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மருது என்பவர் இவரை பிக்கப் செய்து கொண்டு மாநகராட்சி காலனிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த பின்னர், தனது நண்பர்களான யோகேஷ் குமார், அசாருதீன், ஈஸ்வரன், அசோக்குமார் ஆகியோரைப் போன் போட்டு அழைத்தார்.

பின்னர் 6 பேரும் சேர்ந்து நன்றாக மது அருந்தியுள்ளனர். மது வெறியில் ஐந்து பேரும், பழனியம்மாளுடன் அடுத்தடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் போய் விட்டனர்.

ஆனால் பழனியம்மாள் அத்தோடு நிற்கவில்லை. போனைப் போட்டு காதலன் பிரகாஷை அழைத்துள்ளார். பிரகாஷுடன், அவரது நண்பர்களான காட்டுவாசி என்கிற முத்து, வீரமணி, குட்டை கார்த்தி ஆகியோரும் வந்துள்ளனர். இந்த நால்வருடனும் உல்லாசமாக இருந்துள்ளார் பழனியம்மாள்.

வயிறு முட்ட மது அருந்தியது, அடுத்தடுத்து 9 பேருடன் உறவு கொண்டது ஆகியவை காரணமாக மயங்கிய நிலைக்குப் போய் விட்டார் பழனியம்மாள். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. அங்கேயே இரவு முழுவதும் விழுந்து கிடந்துள்ளார். அதிகாலையில் எழுந்து நடக்க முயன்றபோது முடியாமல் விழுந்து விட்டார். அதன் பிறகுதான் போலீஸுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.

மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் வரை இந்த விவகாரம் தற்போது போயுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் குதித்தனர். இதில் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மறைந்திருந்த அசோக்குமார், முத்து, ஈஸ்வரன் ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது மாடி விட்டு மாடி தாவி தப்பியோட முயன்றனர். ஆனால் போலீஸார் கடுமையாகப் போராடி அவர்களைப் பிடித்தனர். மற்றவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

மதுரையை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.

English summary
A woman who was said to be subjected to gang rape, has been found told lies to the police. Police have arrested 3 persons and searching for 6 more in this regard. All these 9 persons had physical relationship with the woman with her consent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X