Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவருக்கு காசநோய் – மனமுடைந்த மனைவி நான்கு மாதக் குழந்தையுடன் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் நான்கு மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சிவாஜி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு பிரபாகரன் என்ற 4 வயதான மகன் உள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன் சித்ராவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிவாஜிக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த சிவாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு காசநோய் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால், சிவாஜியின் உடல் மெலிந்துகொண்டே போனது, உடல் பலமிலந்ததால் அவரால் வேலைக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சித்ரா நேற்று காலை மகன் பிரபாகரனை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறந்து நான்கு மாதமேயான தனது பெண் குழந்தைக்கு பூசிக்கொல்லிக்கு அடிக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் அவரும் அதே பூச்சிக்கொல்லி விஷமருந்தியுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் சித்ரா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்ட வந்து பார்துள்ள்ளனர். அப்போது, வீட்டில் குழந்தையுடன் சித்ரா மயங்கி கிடப்பதை அறிந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+