'அட்டெண்டன்ஸ்' பிரச்சினை.. ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமையாசிரியை
அரூர் வருகைப் பதிவு குறித்து ஏற்பட்ட பிரச்சினையில் உதவி ஆசிரியரை, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் செருப்பால் அடித்து விட்டார். இதனால் அரூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அரூர் அருகே உள்ளது எஸ்.பட்டி. அங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு உதவி ஆசிரியராக இருப்பவர் கலையரசன். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி.
சில தினங்களுக்கு முன்பு வருகைப் பதிவு தொடர்பாக செல்வராணிக்கும், கலையரசனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக ஆசிரியர்கள் அமைதிப்படுத்தியும் இருவரும் அமைதி ஆகவில்லை.
இந்த நிலையில் திடீரென செல்வராணி, தனது செருப்பைக் கழற்றி கலையரசனை அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை செல்வராணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.












Click it and Unblock the Notifications