சென்னையில் பயங்கரம்... 8வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மயிலாப்பூரில் 8 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் ராஜலட்சுமி. அயனாவரத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண். இவர் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று அலுவலகத்திற்கு வந்த அவர் திடீரென 8வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
தற்கொலைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா அல்லது அலுவலகத்தில் பிரச்சினையா என்பது குறித்துத் தெரியவில்லை. போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications