கொள்ளையனால் ஆசிரியை சாவு.. ரேஷன் கார்டுகளை தூக்கி எறிந்து பட்டினப்பாக்கம் பெண்கள் போராட்டம்
சென்னை: கொள்ளையர்களால் ஆசிரியை நந்தினி உயிர் போக காரணமாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பட்டினப்பாக்கத்தில் பெண்கள் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன்கார்டுகளை தூக்கி எரிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள சீனிவாசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நந்தினி மற்றும் அவரின் தோழி லட்சு என்ற காயத்திரி ஆகியோர் பைக்கில் சென்றபோது கொள்ளையர்கள் பணத்தை பறிக்க மற்றொரு பைக்கில் விரட்டினர். இந்த களேபரத்தில் சிக்கி பைக்கில் இருந்து கீழே விழுந்த நந்தினி உயிரிழந்தார். கொள்ளையை தடுக்க முயன்ற சேகர் என்ற முதியவரும் தலையில் அடிபட்டு இறந்தார். காயத்திரி சிகிச்சை பெற்று தேறினார்.

இந்த சம்பவத்திற்கு காரணம், அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைதான் என்பது மக்கள் குற்றச்சாட்டு. அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கூறியும் கடை தொடருவதால் சமூக விரோதிகள் கூடாரமாக அப்பகுதி மாறியுள்ளது.
இதை கண்டித்து, பட்டினப்பாக்கம் ஏரியா பெண்கள் இன்று மதியம், டாஸ்மாக் கடை முன்பு திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை அவர்கள் அடித்து உடைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோபமடைந்த பெண்கள் கொண்டுவந்திருந்த தங்கள் ரேஷன்கார்டுகளை கீழே எறிந்து ஆக்ரோஷம் வெளிப்படுத்தினர். இன்னும் எத்தனை உயிர் போக வேண்டும்.. என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications