மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் 6 பெண்களுக்கு மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 6 பெண்கள் இன்று மயங்கி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தலைநகர் சென்னையில் 6 நாட்களாக இரவு பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6 பெண்கள் இன்று மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும், அதனை ஏற்க மறுத்து நிரந்தரச் சட்டத்தைக் கோரி ஒற்றுமையுடன் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள்.

இந்நிலையில், இன்று மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 6 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இன்று சென்னையில் காணப்படுவதால், மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவிகள் 6 பேர் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பதற்றம் உருவானது. என்றாலும், மாணவிகளை போராட்டக்காரர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், நாங்கள் பெண்கள் என்பதால் போராட்டத்தில் இருந்து விலக மாட்டோம். தமிழ், தமிழர்கள் என்று போராட்டத்தில் குதித்துவிட்டால் கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து கலையவும் மாட்டோம். மயக்கம் அடைந்தவர்கள் சரியான பின்னர் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று உறுதியாக கூறினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications