ஆர்கே நகரில் விஷாலை சூழ்ந்த தாய்மார்கள்.. திருஷ்டி கழித்த பாட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்த நடிகர் விஷாலுக்கு மூதாட்டி ஒருவர் திருஷ்டி கழித்தார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்த நடிகர் விஷாலுக்கு மூதாட்டி ஒருவர் திருஷ்டி கழித்தார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே வேட்பு மனுத்தாக்கல் செய்த அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்கே நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஆர்கே நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

முதல்முறையாக விஷால்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்காண்கிறார் நடிகர் விஷால். இதற்காக ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியிடம் நடிகர் விஷால் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பைக்கில் வந்த விஷால்
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் விசில் சின்னத்தை கேட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்ய பைக்கில் வந்தார் விஷால்.

விஷாலை சூழ்ந்த தாய்மார்கள்
வேட்பு மனுவைத்தாக்கல் செய்தபின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி அவர் புறப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த தாய்மார்கள் அவரை சூழ்ந்தனர்.

செல்பி எடுக்க முயற்சி
மூதாட்டி ஒருவர் தனது கைகளால் விஷாலுக்கு திருஷ்டி கழித்தார். கூட்டத்தில் சிலர் விஷாலுடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.












Click it and Unblock the Notifications