அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... ஆர்டிஓ அலுவலகத்தில் பெண்கள் கூட்டம்!
பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Recommended Video

சென்னை : பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அம்மா ஸ்கூட்டர் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதால் தமிழகம் முழுவதம் ஆர்டிஓ அலுவலகங்களில் காலை முதலே கூட்டம் அலைமோதுகிறது.
தமிழக அரசு சார்பில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பணம் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இருசக்க வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக பெண்கள் விண்ணப்பிக்க அவகாசமும் அளிக்கப்பட்டது. இன்றுடன் அம்மா மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஸ்கூட்டர் மானியம் பெற ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஒரு வாரமாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது, அதிலும் இன்று கடைசி தினம் என்பதால் காலை முதலே பெண்கள் லைசென்ஸ் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஒரு வங்கியில் கடன் பெறலாம். அதன் மூலம் 125 சிசி வரை உள்ள வாகனத்தை வாங்கலாம்.18-40 வயதுக்குட்பட்ட இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்தை தாண்டக்கூடாது.
மிகவும் பின் தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டி திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications