ஹலோ.. நாங்க குடிச்சா என்னாகும் தெரியுமா.. நெல்லையில் பெண்கள் செம போராட்டம்!
நெல்லையில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் குடித்து விட்டு கும்மாளம் போட்டால் குடும்பம் என்னவாகும் என்பதை பெண்கள் நடித்து காட்டினர்.
சென்னை: நெல்லையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடித்தால் வாழ்க்கை என்ன கதியாக இருக்கும் என்பதை ஆண்களுக்கு உணர்த்த குடித்தது போல் நடித்து காட்டி போராட்டம் நடத்தினர் பெண்கள்.
டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு படுத்து கிடப்பதால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. மேலும் இதனால் எத்தனை உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் அப்பாவிகள உயிரிழக்க நேரிடுகிறது.
இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3,500 கடைகள் மூடப்பட்டன.

மாற்று இடம்
இந்நிலையில் வேலையிழந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மாற்று இடங்களில் கடையை திறக்க ஆயத்தமாகினர். இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பெண்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடைகளை புதிதாக ஊருக்குள் வைப்பதற்கும் ஏற்கெனவே உள்ள கடையை மூட வலியுறுத்தியும் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல முறை கோரிக்கை வைத்து மூடாத கடைகளை பெண்களே யாருடைய உதவியும் இல்லாமல் அடித்து துவம்சம் செய்து வருகின்றனர்.

மதுபானக் கடை வேண்டும்
இவர்களுக்கு இணையாக குடிமகன்களும் டாஸ்மாக் கடை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸாரும் வருவாய் துறை அதிகாரிகளும் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடையை எடுக்க வலியுறுத்தி மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடித்து நடித்து காட்டினர்
இதைத் தொடர்ந்து பெண்களும் குடித்தால் வாழ்க்கையும், குடும்பமும், பிள்ளைக் குட்டிகளும் என்னவாவர் என்பதை உணர்த்த பெண்கள் குடிப்பது போல் நடித்து காட்டினர். இதைத் தொடர்ந்து 11- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications