விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது- எடப்பாடி பழனிச்சாமி
தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கூறியுள்ளார்.
டெல்லி: விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நாட்டின் புதிய குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6 அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திரமோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது நீட் தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வில் விலக்கு
பிரதமர் உடனான இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

தடை செய்யவில்லை
அப்போது செய்தியாளர்கள், பெட்ரோலிய மண்டலம், ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றியும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு இல்லத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே என்றும் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலையில் தமிழ்நாடு இல்லத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போதும் வந்திருக்கிறீர்கள். யாரும் தடை செய்யப்படுவதில்லை என்று கூறினார்.

பெட்ரோலிய மண்டலம்
நாகை கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலங்களாக அறிவிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. இன்ற நேற்றல்ல கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த திட்டம் உள்ளது என்றார். இப்போது பாதிக்கப்பட்டுள்ள குழாய்களை செப்பனிடும் பணி நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.

செயல்படுத்த மாட்டோம்
ஹைட்ரோகார்பன் திட்டம் இப்போது கொண்டு வரப்பட்டதல்ல, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications