எப்போதும் போடும் டிவிட் எங்கே பிரதமர் மோடி? தூத்துக்குடி பற்றி ஏன் அமைதி? சரத்குமார் கேள்வி
எப்போதும் டிவிட் போடும் மோடி, ஏன் தூத்துக்குடி பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எப்போதும் டிவிட் போடும் பிரதமர் மோடி, ஏன் தூத்துக்குடி பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 நாட்களுக்கும் மேலாக அவர்கள் போராடி வந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் நடத்திய அமைதி பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இதுவரை மத்திய அரசு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. முக்கியமாக பிரதமர் மோடி இப்படி ஒரு சம்பவம் நடந்தது கூட தெரியாதது போல இருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து தற்போது சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் , மாண்புமிகு பிரதமர் அவர்களே, ரஷ்யாவும், அமெரிக்காவும் சீனாவும் ஏன் நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் கூட உங்களுக்கு நண்பர்களாக தெரியும் போது, தமிழகம் மட்டும் உங்களுக்கும் தேவையில்லையா??? நாங்களும் இந்த தேசத்தின் முக்கியமான மாநிலம்.
#BanSterliteSaveThoothukudi pic.twitter.com/sguCDLLrmq
— R Sarath Kumar (@realsarathkumar) May 24, 2018
இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக அதிகம் உழைத்த, உழைத்துக் கொண்டு இருக்கும் மாநிலம். 13 அப்பாவி மக்களை அநியாயமாக இழந்து தவிக்கும் தமிழகத்திற்கு ஆளுநர் வழியாக உங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வழக்கமான டிவிட் எங்கே??
கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் வைரலாக்கியவர்கள் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications