கிருஷ்ணகிரி அருகே மயிலுக்கு உணவளித்து பராமரிக்கும் அதிசய கிராமம்
கிருஷ்ணகிரி அருகே தோகை விரித்தாடிய படி கிராமத்தில் சுற்றிவரும் மயிலுக்கு பொதுமக்கள் உணவளித்து வருகின்றனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தினந்தோறும் தங்களை காண வந்து செல்லும் மயிலுக்கு பொதுமக்கள் உணவளித்து பாசத்துடன் பராமரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி உள்ளிட்ட மிருகங்களும் மயில் போன்ற பறவைகளும் உள்ளது.

இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.அது போல் சூளகிரி அருகே உள்ள எலசேபள்ளி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மயில் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றது.
அவ்வாறு வரும் மயில் பொதுமக்களை கண்டு அஞ்சாமல் அவர்களுடன் பழகி வருகிறது. மக்கள் வளர்க்கும் கால்நடைகள் உடன் மயிலும் சேர்ந்து தீனிகளை கொத்தி தின்று விட்டு செல்கிறது.
தொடர்ச்சியாக இந்த மயில் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அங்குள்ள மக்கள் இந்த மயிலுக்கு நாள் தோறும் ஆர்வத்துடன் உணவளித்து வருகின்றனர்.சில நேரங்களில் தோகை விரித்தாடும் மயிலை அவ்வூர் வாசிகள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications