கொடைக்கானல் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் சோகம் - சாலைப் பணியாளர் மாரடைப்பில் மரணம்
கொடைக்கானலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற சாலைபணியாளர் துரைராஜ் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: கொடைக்கானலில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சாலைப் பணியாளர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தமிழகம் முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர். கொடைக்கானலில் நடைபெற்ற போராட்டத்தில் சாலை பணியாளர் துரைராஜ் என்பவர் பங்கேற்றார். அரசுக்கு எதிராக முழக்கமிட்ட துரைராஜ்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரைராஜ். சிகிச்சை பலனின்றி துரைராஜ் மரணமடைந்தார்.












Click it and Unblock the Notifications