கன்னியாகுமரி அருகே பரிதாபம்.. பணியின்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்குவாரியில் கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், சித்திரங்கோடு, காயல் கரை, கஞ்சிக்குழி போன்ற பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் பெரிய பாறை கற்களை உடைத்து சிறு கற்களாகவும். ஜல்லிகளாகவும் மாற்றி குமரி மற்றும் கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த குவாரிகளில் உள்ள இயந்திரங்களில் பணி புரிய ஐம்பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும் உள்ளனர், இதில் குலசேகரம் அருகே உள்ள கஞ்சிக்குழியில், கல் உடைக்கும் வேலையை பார்ப்பவர் பெனடிக். 54 வயது. இவர் கோட்டூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இயந்திரம் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து பெனடிக் உடலை காப்பாற்றிய குலசேகரம் போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications