Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஈரமுள்ள தமிழர்கள்.. பாரதிராஜா நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரமுள்ள தமிழர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

7 பேர் விடுதலைக்காக இன்று நேற்றல்ல, ஜெயலலிதா இருந்தபோதே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மா வழியில் செயல்படும் அரசு இது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஈரமுள்ள தமிழர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. இருவரும் எளிமையானவர்கள்.

World Tamils will thank Tamilnadu government: Bharathi Raja

நல்லவேளையாக, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்துள்ளார்கள். பரிந்துரை மட்டுமல்ல, ஆளுநருக்கு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். தவறுகள் என்பது மனித வாழ்க்கையில் சகஜம். 7 பேரும் தவறு செய்தவர்கள். திட்டமிட்ட குற்றவாளிகள் கிடையாது. 27 வருடங்கள் சிறைக்குள் 4 சுவரையே பார்த்து வாழ்ந்துவிட்டனர். வாழ்க்கையின் முக்கால் பகுதியை சுவற்றுக்குள் கழித்துள்ளனர். எந்த ஜீவனுக்கும் சுதந்திர வாழ்க்கையை வாழ உரிமை உண்டு.

உலக தமிழர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+