கடல் ஆமை 300 வருடம் வாழ காரணமே யோகாதானாம்.. தேவகோட்டை பள்ளியில் கலகல பேச்சு!
தேவக்கோட்டை பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தேவக்கோட்டை: யோகா செய்வதால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்றும், கடல் ஆமை நன்றாக மூச்சை இழுத்து விடுவதால்தான் 300 வருடம் உயிர் வாழ முடிவது சாத்தியம் என்றும் தேவக்கோட்டை சார்பு ஆய்வாளர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் கருப்பையா வரவேற்க, தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவக்கோட்டை நகர் காவல் துறை சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.

கடல் ஆமை வாழும் ரகசியம்
இவ்விழாவில் தேவகோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் மருது, யோகா தினம் குறித்து மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, யோகா நமக்கு பல வகையிலும் நன்மையை அளிக்கிறது. உடல், ஆன்மா, மன அழுத்தம் போன்றவற்றுக்கு பல வகையிலும் பயனுள்ளதாக அமைகிறது. நாம் நொடிக்கு பல மூச்சுகளை வெளிவிட்டுக் கொண்டு இருக்கிறோம், ஆனால் கடல் ஆமை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே மூச்சை இழுத்து நிறுத்தி நிதானமாக வெளிவிடுகிறது என்றார்.

ஆயுளை கூட்டும் யோகா
அதனால்தான் 300 ஆண்டுகள் கடல் ஆமையால் உயிர் வாழவும் முடிவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்று தெரிவித்த மருது, மனிதனின் ஆயுட்காலம் கூடுவது யோகா செய்வதனால்தான் முடியும் என்று அறிவுறுத்தினார்.

அரசுபள்ளிதான் சிறந்தது
தொடர்ந்து பேசிய மருது மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது; எந்த ஒரு வேலைக்கும் லஞ்சம் வாங்காமல் இருந்தால் யாருக்கும், எந்த இடத்திலும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லலாம். எனவே இந்த நாளில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்து கொள்வோம். அரசு பள்ளியில் படிப்பதை தாங்கள் யாரும் தாழ்வாக என்ன வேண்டாம். நான் இந்த பதவிக்கு வரகாரணமே அரசு பள்ளியில் படித்ததாலதான். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்துதான் உலகமே போற்றக்கூடிய வகையில் உயர்ந்தார்,

நல்லதை செய்ய உறுதியேற்போம்
சிறு வயதிலேயே நல்லது எது, கேட்டது எது? என ஆசிரியர் சொல்வதை கேட்டு, தெரிந்து கொண்டு செயல்பட்டால் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வரமுடியும். நல்லதை மட்டுமே செய்வோம் என்றும் கெட்டதை செய்ய வேண்டாம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மருது விழாவில் பேசினார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மாணவர்கள் அசத்திய யோகா நிகழ்வினை கண்டுகளித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications