சிம்பு, அனிருத் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்கத் தகுதியற்றவர்கள்!- ராஜேஷ்குமார்

Subscribe to Oneindia Tamil

கோவை: சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள் என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீப் பாடல் என்ற பெயரில் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் ஆபாசச் சொற்களோடு பாடல் வெளிட்ட சிம்புவும் அனிருத்தும் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளனர்.

Writer Rajesh Kumar blasts Simbu and Anirudh

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் இந்த இருவர் பற்றியும் பேஸ்புக்கில் இப்படி எழுதியுள்ளார்:

பூவில் செய்த ஆயுதம்.......... மாண்புமிகு முதலமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டிலேயே சிம்புவும். அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும் அதை நியாயப்படுத்தவும் துணிந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் துணிச்சலை முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலேயே

கிள்ளி ஏறிய வேண்டும். நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம்.

சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்கத் தகுதியற்றவர்கள்.

பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள், ஆனால் உள்ளத்தால் இரும்பைப் போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் 'பூவில் செய்த ஒரு ஆயுதம்' என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்!"

-இவ்வாறு ராஜேஷ்குமார் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+