Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழுத்தாளர் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் - படைப்பாளிகள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக தஞ்சையின் அனைத்து இலக்கிய அமைப்புகளின்,எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் கூட்டு ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பசு கவுதமன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அமர்சிங், மதிமுக தலைமைக்கழக பேச்சாளர் வி.விடுதலை வேந்தன், தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அமைப்பாளர் தஞ்சை சாம்பான், தமிழ் கலை இலக்கியப் பேரவையின் வைகறை, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன், பொறியாளர் கென்னடி, தஞ்சைக் கவிஞர் சுகன், வெற்றித் தமிழர் பேரவையின் ராகவ் மகேஷ், தஞ்சை இலக்கிய வட்டத்தின் செ.சண்முகசுந்தரம், தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தியாக சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கே.செல்வகுமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.கலந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.பழனிராஜன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Writers stage agitation in support of Perumal Murugan

நிறைவாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா.காமராசு நிறைவுறையாற்றினார். பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள்,எழுத்தாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகவும்,அவருக்கு எதிராக செயல்பட்டு வரும் மதவாத,சாதிய சக்திகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+