18 வயது இளம்பெண்ணின் இந்த நிலைக்கு யார் காரணம்? அதிர்ச்சியில் உறைந்த கீரிப்பாறை போலீசார்
10-ம் வகுப்பு மாணவன் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளான்.
கன்னியாகுமரி: 18 வயது இளம்பெண் சொன்ன வார்த்தைகளை கேட்டு கீரிப்பாறை போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கீரிப்பாறை அருகே ஒரு மலை கிராமம் உள்ளது. இங்கு 18 வயது பெண் ஒருவருக்கு திடீரென நேற்று முன்தினம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இதனால் அந்த இளம்பெண்ணின் சொந்தக்காரர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள்.

எங்கே உன் புருஷன்
அங்கு டாக்டர்கள் செக் பண்ணி பார்த்தபிறகு, "ஒன்னும் பயப்படும்யா இல்லை... எங்கே உன் புருஷன்" என்று விசாரித்தனர். அதற்கு உடன் வந்த உறவினர்கள், "இன்னும் இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகலை" என்றார்கள்.

போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், "இந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்" என்று சொன்னார்கள். அத்துடன், அது அரசு மருத்துவமனை என்பதாலும், அந்த பெண் திருமணமாகமலேயே கர்ப்பம் ஆகிவிட்டதாலும் உடனடியாக கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.

போலீசார் அதிர்ச்சி
அப்போது, அரசு டாக்டர்கள் அதிர்ச்சியைவிட போலீசார்களின் அதிர்ச்சி இப்போது இன்னும் எக்கச்சக்கமாகவே ஆகிவிட்டது. அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை தீவிர காதலித்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால்தான் இப்படி கர்ப்பம் ஆகிவிட்டதாகவும் விசாரணையில்அந்த பெண் கூறினார். போலீசாரின் அதிர்ச்சிக்கு இது காரணம் இல்லை.. அந்த பெண் கூறிய அந்த "ஒருவர்" 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது பையனாம்!!!

சிக்குவது பெண்தான்
இப்போது இளம்பெண்ணுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள். வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டால் இதில் மாட்டுவது முதலில் அந்த பெண்தான் என்கிறார்கள் போலீசார்கள்.












Click it and Unblock the Notifications