காலையில் எழுந்து... வாசலில் கோலம் போட்ட குமாரி.. ரூம் கதவை சாத்தி.. கொடுமை..!
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்
மயிலாடுதுறை: காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்ட இளம்பெண், ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சடலமாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறையை அடுத்த மேலமுடுக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.. இவர் ரயில்வேயில் தற்காலிக பெயின்டராக வேலை பார்த்து வருகிறார்... இவரது மனைவி செல்வக்குமாரி.. கல்யாணம் ஆகி 2 வருஷமாகிறது.. ஒரு வயதில் லிபிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பார்த்திபனுக்கு விருதுநகருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவும் அவர் அங்கு சென்றுவிட்டார்.. இதனால், மாமியார் வீட்டில்தான் செல்வக்குமாரி வசித்து வந்துள்ளார்.. அப்போது பார்த்திபனின் அம்மா தனலட்சுமி, செல்வக்குமாரியிடம் 25 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.. மேலும் வார்த்தைகளால் துளைத்தெடுத்துள்ளார்.

மாமியார்
இதனால் வேதனையடைந்த செல்வக்குமாரி, தன் வீட்டிற்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்.. இந்நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமாரியிடம் மாமியார் தனலட்சுமி மறுபடியும் வரதட்சணை பிரச்சனையை எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த செல்வக்குமாரி மனமுடைந்து தன்னுடைய ரூமுக்குள் குழந்தையுடன் சென்று பூட்டிக்கொண்டுள்ளார்.

தூக்கு
அதற்கு பிறகு ரொம்ப நேரமாகியும் செல்வக்குமாரி வெளியே வரவில்லை. இதனால் பதறிபோன தனலட்சுமி, அந்த ரூம் கதவை தட்டினார்.. ஆனால் திறக்கப்படவில்லை.. அதனால், அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் போய் சொல்லவும், அவர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, செல்வக்குமாரி மின்விசிறியில் ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அவருக்கு பக்கத்தில் குழந்தை லிபிஷாவும் இறந்து கிடந்தது.. அந்த குழந்தையின் காதில் ரத்தம் வழிந்தபடியே இருந்தது.

பார்த்திபன்
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்படவும், விசாரணை ஆரம்பமானது.. செல்வக்குமாரியின் அண்ணன் வரதட்சணை கேட்டு இந்த கொடுமை நடந்ததாக போலீசில் புகார் தந்தார்.. செல்வக்குமாரி எம்சிஏ பட்டதாரியாம்.. 24 வயதாகிறது.. பார்த்திபனும், இவரும் 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.. பிறகு திடீரென வீட்டில் சொல்லி கல்யாணமும் செய்து கொண்டனர்.. அவசரமாக இந்த கல்யாணம் நடந்ததால், பெண்ணுக்கு 3 சவரன் நகை மட்டுமே போட்டுள்ளதாக தெரிகிறது... ஆனால் 25 சவரன் நகை வேண்டும் என்று மாமியார் ஒற்றை காலில் நின்றுள்ளார்..

பிணம்
சம்பவத்தன்றுகூட, செல்வக்குமாரி வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுள்ளார்.. இதை அக்கம்பக்கத்தினரும் பார்த்துள்ளனர்.. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் பிணமாக கிடந்ததை கண்டுதான் அதிர்ந்தனர்.. இறுதியில் இந்த வழக்கு தொடர்பாக தனலட்சுமி, பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, செல்வகுமாரி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், அதிலும் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டிருக்க முடியாது, அந்த ஜன்னல் மிக குறைந்த உயரத்தில் இருக்கும்போது எப்படி தூக்கு போட்டிருக்க முடியும் என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது..!
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications