கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம்? போலீஸ் குவிப்பால் பரபரப்பு
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஓஎன்ஜிசியை விரட்ட வேண்டும் என்று கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த உளவுத் துறை தகவலின்படி அங்கு பாதுகாப்பு முன்னெச்சரியாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் கடந்த 30-ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் போராட்ட்ம நடத்தினர். இதில் போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களை வெளியே விடக் கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவர்களது கோரிக்கை நிறைவேற வில்லை.

இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புரட்சி போராட்டம் செய்தது போல் சென்னை மெரினாவில் கதிராமங்கலம் மக்களுக்காக போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத் துறை தகவலை அடுத்து மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications