ஈரோட்டில் பரபரப்பு.. கழிவுநீர் கலந்த தண்ணீருடன் தமாகா இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் கழிவுநீருடன் தமாகா இளைஞரணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு: கழிவுநீர் கலந்த தண்ணீருடன் தமாகா இளைஞர் அணியினர் ஈரோடு ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.மா.கா இளைஞரணி சார்பில் மக்கள் பிரச்சனைகள் குறித்து மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று மனு அளிக்கப்பட்டது.

அதன்படி இளைஞரணி மாநிலதலைவர் யுவராஜா தலைமையில் கழிவு கலந்த தண்ணீருடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுவராஜா. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கழிவுகள் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடியைவிட அதிக அளவில் தண்ணீர் மாசடைந்துள்ளதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் எந்தவிதமான மக்கள் பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டிய யுவராஜா ஈரோட்டில் சுற்றுசாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழ்மாநில காங்கிரஸ் மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தற்போது நான்கு வாரங்களில் ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதாவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனையடுத்து மாசடைந்த குடிநீர் பாட்டில்களை அதிகாரிகளிடம் கொடுத்த அவர் மேலும் சில பாட்டில்கள் தண்ணீரை தரையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications