கேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்.. கோவையில் இளைஞர் பலி!
கோவை: அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில் மழை, வெள்ளம் ஓய்ந்த நிலையில், விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு பரவும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இதனால் கேரளத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தையும் எலிக்காய்ச்சல் மிரட்ட தொடங்கியுள்ளது. கோவை கிணத்துக்கடவு கொண்டப்பட்டிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்கூட்டியே கண்டறிந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டம் ஐயங்கொள்ளியை சேர்ந்த சிவலிங்கம், தேவாலா பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் எலி காய்ச்சல் அறிகுறியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், வால்பாறையை சேர்ந்த பொன்னையனுக்கு எலி காய்ச்சலின் அறிகுறி இருப்பதால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளதால் தமிழக - கேரள எல்லையோர மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications