Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலிக்குமாறு வற்புறுத்தியவரை குத்திக் கொன்ற இளம்பெண்ணின் தம்பி, பள்ளி மாணவர்கள் 3 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அக்காவை காதலிக்குமாறு வற்புறுத்திய வாலிபரை குத்திக் கொன்ற மைனர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்தவர் குருநாதன்(19). பெயிண்டர். சென்னை, நெசப்பாகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு வராததால் அவரை கண்டுபிடித்துத் தருமாறு அவரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார். மேலும் தான் புகார் அளிக்கவிருப்பது குறித்து குருநாதனின் நண்பர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ராமு(17), ராஜா(17)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய 10ம் வகுப்பு மாணவர்கள் திங்கட்கிழமை மதியம் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறுகையில்,

நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து குருநாதனை கொலை செய்து அவரின் உடலை மாங்காடை அடுத்த கொளப்பாக்கம், செங்கல் சூளை அருகே உள்ள முட்புதரில் போட்டுவிட்டோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அந்த 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். மாங்காடு போலீசார் அந்த 2 பேர் தெரிவித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு குருநாதனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

ராமுவின் தூரத்து உறவினர் குருநாதன். குரு ராமுவின் அக்காவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். குருவும், ராமுவின் அக்காவுக்கும் இடையே அக்கா, தம்பி உறவாம். அதனால் அவரை காதலிக்காதே என்று ராமு குருவை எச்சரித்துள்ளார். இந்நிலையில் குரு ராமுவின் அக்காவிடம் செல்போன் ஒன்றை கொடுத்து அதை சார்ஜ் போட்டு உன் தம்பியிடம் கொடு என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை ராமுவுக்கு குரு போன் செய்து அவர் இருக்கும் இடத்தை கேட்டு தெரிந்தார். இதையடுத்து ராமு கூறியபடி அவர் கொளப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அப்போது குரு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமுவை குத்த முயன்றார். ஆனால் ராமு அந்த கத்தியை பறித்து தனது நண்பர்களுடன் சேர்ந்து குருவை குத்திக் கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக ராமு, ராஜா, 9ம் வகுப்பு மாணவர் ஒருவர், 11ம் வகுப்பு மாணவர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+