திருமணம் செய்து வைக்காத தாயையும், தம்பியையும் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை!
கரூர்: கரூரில் திருமணம் செய்து வைக்க கூறிய விவகாரத்தில் தாயையும், தம்பியையும் அரிவாளால் தாக்கிய இளைஞருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளாளபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் (28). இவரது தாய் செல்லம்மாள் (52). சந்திரசேகரின் தம்பி சசிகுமார் (23).

சந்திரசேகர் கடந்த 2010 அக்டோபர் 10ம் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தாய் மற்றும் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். இந்த மோதல் முற்றஇயதில் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார் சந்திரசேகர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீத்பதி குணசேகரன் இருவரையும் கடுமையாக தக்கியதற்காக தலா 7ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டார்.
தீர்ப்புக்கு பிறகு குற்றவாளி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கபட்டார்.












Click it and Unblock the Notifications