விபரீத ஆசை.. ஆப் மூலம் தகாத உறவுக்கு அழைப்பு.. காரில் பதறிய மத போதகர்.. தென்காசியில் ஷாக்!
தென்காசி: தென்காசி மாவட்டம் வல்லம் அருகே காரில் லிப்ட் கேட்டு செயின், பணத்தை வழிப்பறி செய்ததாக மத போதகர் அளித்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆப் மூலம் தகாத உறவுக்கு மத போதகரை அழைத்து 4 இளைஞர்கள் பணத்தை பறிமுதல் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது
தென்காசி மாவட்டம் வல்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34). மதுரையில் உள்ள ஒரு தேவலாயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சார்லி அமல்சிங் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான வல்லத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், காரில் சென்ற தன்னிடம் லிப்ட் கேட்பது போல ஏறி தன்னிடம் நகை மற்றும் கூகுள் பே மூலமாக பணத்தை பறித்து சென்றதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மத போதகரிடம் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பரவிய செய்தி வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குற்றாலம் போலீசார், மத போதகர் சார்லி அமல்சிங்கிடம் வழிப்பறி குறித்தும் நடைபெற்ற விதம் குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், குற்றாலம் அருகே உள்ள காசிமேஜபுரத்தை சேர்ந்த வைரமுத்து, மதுரையை சேர்ந்த மகேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மத போதகர் அளித்த புகாருக்கு மாறான தகவல்கள் கிடைத்தது.
அதாவது, வழிப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரையும் மதபோதகர் சார்லி அமலிசிங்கிற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. கிரைண்டர் எனும் ஆப் மூலம் அவர்கள் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். சார்லின் சிங்கிடம் தகாத உறவில் ஈடுபடுவதற்காக நான்கு வாலிபர்களும் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர். இதை சார்லி அமல்சிங் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகே சார்லிஅமல் சிங் காரில் ஏறிய அந்த இளைஞர் வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றதோடு, சார்லி அமல்சிங்கை தாக்கி செயின், மோதிரம் உள்ளிட்டவற்றையும் பறித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
விபரீத ஆசையில் இது செயலி மூலமாக உறவுக்கு அழைக்கும் நபர்களை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருவது சமீப காலமாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பாதிக்கப்படும் நபர்கள், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பதால், மோசடிகள் நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications