மெரினாவில் தடையை விலக்குங்கள்... நாங்கள் சாதித்து காட்டுகிறோம்... இளைஞர்கள் ஆவேசம்!
காவிரி உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை : காவிரி உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மெரினாவில் போராட அரசு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டுக் கொண்டுவருவதற்காகப் போராட இளைஞர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல காவிரி நீரை பங்கிட்டு கொடுத்த கையோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாகச் சொன்னது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதன் பலன் இன்னும் தமிழக மக்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதே போன்று தமிழக அரசும் மத்திய அரசு மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி உரிமைக்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காவிரி உரிமையை மீட்க அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்த வேண்டாம். மெரினாவில் போராடுவதற்கு போடப்பட்டுள்ள தடையை மட்டும் விலக்கினாலே போதும், நம்முடைய உரிமைக்காகவும், விவசாயத்தை காக்கவும் போராட இளைஞர்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications