நெடுவாசல் சுடுகாட்டில் போராட்டம்.. ஹைட்ரோ கார்பன் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுடுகாட்டில் ஹைட்ரோ கார்பன் உருவபொம்மையை எரித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்று 19 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்டை கிராமங்களான வாணக்கன் காடு, வடகாடு உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளன.

தமிழகம் முழுவதும், கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தவிர விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. திரையுலகினரும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தங்களது ஆதரவை நெடுவாசல் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். நெடுவாசல் சுடுகாட்டில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த ஹைட்ரோ கார்பன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications