ராம்குமாருக்கு ஆதரவாக பேசுவதா? கருணாநிதி, திருமாவுக்கு "வாட்ஸ் அப்" மூலமாக யுவராஜ் கண்டனம்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செயல்படுவதாக கூறி இது சம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவராஜ்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி யுவராஜ். நீண்ட காலமா தலைமறைவாக இருந்து வாட்ஸ் ஆப் மூலமாக அவ்வப்போது சர்ச்சைக்கிடமான முறையில் பேட்டிகளை வெளியிட்டு வந்த யுவராஜ் பெரும் பரபரப்புக்கு மத்தியில் போலீஸில் சரணடைந்தார்.
யுவராஜ் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யுவராஜ்.
இந்த வீடியோவில் 18.7.2016 அன்று பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ராம்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாகக் கூறஇ திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் யுவராஜ்.