சொன்னா கேக்க மாட்டீங்களா? விநாயகர் சிலை ஊர்வலத்தில் எஸ்.பி - இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது மேளம் அடித்ததை போலீசார் கண்டித்தனர். போலீசார் தடுத்தும், மேளம் அடிப்பதை நிறுத்தாததால் மாவட்ட எஸ்.பிக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் - இந்து அமைப்பினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோஷங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்லவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சில இடங்களில் போலீசாரின் அறிவுரைகளை மீறியதால் பதற்றம் ஏற்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்வையொட்டி கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தபோதும் சில இடங்களில் தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி வீதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மேளம் அடித்ததை போலீசார் கண்டித்தனர். அதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மாவட்ட எஸ்.பிக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் தடுத்தும், மேளம் அடிப்பதை நிறுத்தாததால் போலீசார் - இந்து அமைப்பினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து, போலீசார் அமைதிக்கு கொண்டுவந்து, ஊர்வலத்தை தொடர்ந்தனர்.
முன்னதாக இன்று தேனியில் சிவசேனா கட்சியினர் சார்பில் 4 அடி விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விநாயகர் சிலையை நேரு சிலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தேனி அரண்மனை புதூரில் உள்ள பெரியாற்றில் கரைத்தனர். சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை கரைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், அதனை மீறி சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications