பாஜகவில் தஞ்சமடைந்த.. ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு கொரோனாவாம்.. ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
ஹெலிகாப்டர் சகோதரரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது
தஞ்சை: கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்ஆர் கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் என்ற சகோதரர்கள்.. கும்பகோணத்தை சேர்ந்தவர்கள்.. விக்டரி என்கிற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்துபவர்கள்..!
வெளிநாட்டு மாடுகளை கொண்டு 3 இடங்களில் பால் பண்ணை வைத்து நடத்துபவர்கள்.. ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள்..

ஹெலிகாப்டர்
இப்படி பல தொழில்களில் இந்த சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் 2 பேருமே ஒன்றாகவே ஹெலிகாப்டரில் வலம் வந்து கொண்டே இருப்பார்களாம்.. பணத்தை வசூல் செய்வதும் இப்படி பறந்து பறந்துதான் வசூலிப்பார்களாம்.. அதனாலேயே ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்மூலம் தங்களை பிரமாண்ட தொழில் அதிபர்கள் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்தனர்.. வெளிநாடுகளில் தங்கச்சுரங்கம் இருப்பதாகவும் சொல்லி அதையும் நம்ப வைத்தனர்..

மோசடி
ஒருமுறை நிதி நிறுவனத்தில், ஒன்று கொடுத்தால் 3 என்பது போல கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்ததும், பலதரப்பட்ட மக்கள் கோடிக்கணக்கில் முதலீடாக கொடுத்த பணத்தை ஏமாற்றியதாக இவர்கள் மீது புகார்கள் எழுந்தது.. எனவே, உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக பாஜகவில் இணைந்தனர்.. அத்துடன், பல கூட்டங்களில் கலந்துகொண்டனர்.. வேல் யாத்திரைக்கு வந்த எல்.முருகனுக்கு உபசரிப்பு செய்ததாகவும், அப்போது லட்சக்கணக்கில் கட்சி நிதியை தந்ததாகவும்கூட தகவல்கள் கசிந்தன.

பாஜக
முருகனை தவிர, கருப்பு முருகானந்தம், எச்.ராஜா உள்ளிட்டவர்களும், இந்த சகோதரர்களோடு நெருக்கமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.. முதலீடு செய்து ஒரு வருடமாகியும் அசலும் வட்டியும் வராததையடுத்துதான், பணம் முதலீடு செய்தவர்களுக்கு லேசான கலக்கம் வந்துள்ளது.. அதனால், கொடுத்த பணத்தை கேட்க ஆரம்பித்து நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்..

கும்பகோணம்
அதற்கு இந்த சகோதரர்கள், "நாங்க பாஜகவில் இருக்கிறோம்.. மேலிடத்தில் தொடர்பில் உள்ளோம்.. எங்களை பற்றி புகார் தந்தாலும்கூட, ஒரு ரூபாய் கூட வாங்க முடியாது" என்றும் மிரட்டினார்களாம். ஆனாலும் கும்பகோணத்தை சேர்ந்த பைரோஸ் பானு - ஜபருல்லா தம்பதியினர் மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. இறுதியில், புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் கடந்த 6-ம்தேதி போலீசார் கைது செய்தனர்...

கொரோனா தொற்று
இவர்களிடம் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, அவர் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது... இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications