ரைட் ஹேண்டுக்கு ‘செக்’.. வைத்திலிங்கம் கோட்டையில் வரிந்துகட்டும் எடப்பாடி.. பலத்தை காட்ட செம பிளான்!
தஞ்சாவூர் : ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ்ஸின் வலதுகரமான வைத்திலிங்கத்தின் கோட்டையான ஒரத்தநாட்டில் வரிந்துகட்டி களமிறங்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
அண்மையில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளனர். இதற்கான விழா பொதுக்கூட்டமாக வரும் மே 4ஆம் ஆதேதி நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சைக்கு வருகை தர உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பதிலடி கூட்டம் : அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளதால் ஓபிஎஸ் கட்சி பெயரையும், கொடியையும், சின்னத்தையும், பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயல் என ஈபிஎஸ் அணியினர் தெரிவித்த எதிரப்பையும் மீறி திருச்சியில் ஓபிஎஸ் தரப்பு பிரமாண்டமாக முப்பெரும் விழா மாநாட்டை நடத்தியது. இதற்கு பதிலடியாகவே ஒரத்தநாட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வரும் மே 4ஆம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் காமராஜ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். டெல்டா மண்டலத்தில் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டம் அமையும் என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

வைத்திலிங்கத்திற்கு செக் : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் ஓபிஎஸ்ஸுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவரை தன் பக்கம் இழுக்க பலமுறை முயன்றும், வைத்திலிங்கம் பிடிகொடுக்கவில்லை. வைத்திலிங்கத்திற்கு செக் வைக்கும் வகையிலேயே, அவரது ஏரியாவான ஒரத்தநாட்டில் இருந்து அமமுகவின் முக்கிய புள்ளியான மா.சேகரை, மாஜி அமைச்சர் காமராஜ் மூலம் தன் பக்கம் இழுத்தார் ஈபிஎஸ்.
இந்நிலையில் தான், திருச்சி மாநாட்டை நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருக்கும் வைத்திலிங்கத்தின் சொந்த மண்ணில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

வரிந்துகட்டும் மாஜிக்கள் : முன்னாள் அமைச்சர் காமராஜ் இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தாலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பலத்தைக் காட்ட பலமான கூட்டத்தைக் கூட்டுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
திருச்சியில் ஓபிஎஸ்ஸுக்கு கூடிய கூட்டத்தால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமியை, மே 4ஆம் தேதி ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூடவிருக்கும் கூட்டத்தின் மூலம் கூல் செய்ய தீவிரமாக தயாராகி வருகிறார்களாம் அதிமுக மாஜிக்கள்.
-
தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி.. ராமதாஸ் உடனான மோதலுக்கு பிறகு திடீர் விசிட்! பின்னணி என்ன? -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
வாரிசுகளின் போட்டியால் பரபரக்கும் பென்னாகரம்.. ராமதாஸ் மகன் Vs ஜி.கே. மணி மகன்? - யார் பலம்?












Click it and Unblock the Notifications