கஜா பாதிப்பு.. 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு.. மக்கள் வரவேற்பு
கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் கஜா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் மதுவில் பணத்தை செலவு செய்ய கூடாது என்றும், பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் இயங்காது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் கிரிலோஸ்கர் வெளியிட்டார். இந்த நடவடிக்கை டெல்டா பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அருகாமையில் உள்ள மற்ற மாவட்ட மக்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications