முதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்
கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
Recommended Video
பட்டுக்கோட்டை: கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். கஜா புயலில் பட்டுக்கோட்டை மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் மொத்தமாக வீழ்ந்துவிட்டது.
[புதுக்கோட்டை நினைத்ததை விட பெரிய இழப்பை சந்தித்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த முதல்வர் பழனிச்சாமி! ]
இந்த நிலையில் பட்டுகோட்டையில் சூரப்பள்ளம் உள்ளிட்ட புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆய்வு செய்தனர்.
அங்கு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விழுந்திருக்கும் தென்னை மரங்களை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகளிடம் இழப்பு குறித்து பேசினார்கள்.
இந்த நிலையில் புயல் நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார் முதல்வர். மரங்கள் விழுந்ததற்கும், வீடுகள் இடிந்ததற்கும் நிவாரண நிதிகளை வழங்கினார்.
மேலும் புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார் முதல்வர். புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 5 பேர் பலியானார்கள்.