டெல்டாவில் மீண்டும் பலத்த மழை.. நிவாரண பணிகள் தடைபட்டது.. மக்கள் கலக்கம்!
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
Recommended Video

தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது, டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது.

எங்கு பெய்கிறது
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காலையில் சாரல் மழையாக தொடங்கியது இப்போது கனமழையாக மாறியுள்ளது.

கனமழை
புயல் அதிகம் பாதித்த பட்டுக்கோட்டை, திருவாரூர், முத்துப்பேட்டையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். புதுக்கோட்டையில் கனமழை பெய்கிறது. காரைக்காலிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இப்போதுதான் பல இடங்களில் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது.

மிக மோசம்
கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது. இந்த நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

என்ன காரணம்
நேற்றுதான் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications