பெண் பக்தையுடன் டும் டும் டும்.. கும்பகோணம் சூர்யனார் கோவில் மடாதிபதி பெங்களூரில் பதிவு திருமணம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனத்தின் 28 வது மடாதிபதியான 54 வயது நிரம்பிய மகாலிங்க சுவாமி 47 வயது நிரம்பிய பெண் பக்தை ஹேமா ஸ்ரீயை பெங்களூரில் அழைத்து சென்று பதிவு திருமணம் செய்துள்ளார். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்னர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமி. இவருக்கு வயது 54.

இவரை ஏராளமான பக்தர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி ஆதீனத்துக்கு வந்து மகாலிங்க சுவாமியிடம் பக்தர்கள் ஆசி பெற்று செல்வது வழக்கம்.
இந்நிலையில் தான் பெண் பக்தையை சூரியனார் கோவில் ஆதீன மடாபதிபதி மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். ஹேமா ஸ்ரீ என்ற 47 வயது பக்தரை அவர் கரம் பிடித்துள்ளார். அதாவது பக்தை ஹேமா ஸ்ரீ அடிக்கடி மடாதிபதி மகாலிங்க சுவாமியை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார்.
இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மகாலிங்க சுவாமி - ஹேமா ஸ்ரீ ஆகியோர் பெங்களூர் சென்று அங்கு வைத்து பதிவு திருமணம் செய்துள்ளனர். இவர்களின் பதிவு திருமணம் என்பது அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது.
கடந்த மாதம் 10ம் தேதியே பதிவு திருமணம் நடந்து இருந்தாலும் கூட அதுபற்றி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. இருவரும் ரகசியம் காத்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் இவர்களின் திருமணம் குறித்த தகவல் இன்று வெளியானது.
அதோடு தனது திருமணம் குறித்து மடாதிபதி மகாலிங்க சுவாமி விளக்கமும் அளித்துள்ளார். அவர் தரப்பில், ‛ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும் அவர் பக்தையாக தொடர்வார்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பெண் பக்தரை அவர் திருமணம் செய்து உள்ளது உறுதியாகி உள்ளது.
இருப்பினும் கூட அந்த பெண் பக்தையின் பின்னணி என்ன? அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளதா? இல்லையா? அவரது சொந்த ஊர் என்ன? என்பது பற்றிய பிற தகவல்கள் தெரியவில்லை. அதேபோல் பொதுவாக மடாதிபதியாக இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியே இருப்பார்கள். ஒன்று திருமணமாகி மனைவியை பிரிந்து துறவியான பிறகு மடாதிபதியாக இருப்பார்கள். இல்லாவிட்டால் திருமணமே முடிக்காமல் துறவு பூண்டு மடாதிபதியாக இருப்பார்கள்.
ஆனால் தற்போது சூர்யனார் கோவில் ஆதீன மடாதிபதி, மடாதிபதியாக இருந்து கொண்டே பெண் பக்தையை திருமணம் செய்துள்ளார். அதோடு திருமணம் செய்தும் மடாதிபதியாக பலபேர் செயல்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து இருப்பது அவரது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக இந்த சூர்யனார் கோவில் ஆதீன மடாதிபதியாக சங்கரலிங்க தேசிய பராமாசாரிய சுவாமிகள் இருந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோரடங்குளத்தை சேர்ந்தவர். இவர் தனது 102வது வயதில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். அதன்பிறகு ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் பெண் பக்தைய ஹேமா ஸ்ரீயை பெங்களூரில் பதிவு திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications