ப்ளான் பண்ணி பண்ணலைங்க.. அதுவா எதார்த்தமா நடந்தது! அலர்ட் ஆன வைத்தியலிங்கம்! ஆனால் சின்னம்மாவாம்!
தஞ்சாவூர் : இன்று சசிகலாவை சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் கூறினாலும், வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தாய் எனவும், சின்னம்மா எனவும் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என கூறிக் கொள்ளும் சசிகலா வந்திருந்தார்.
அதே நிகழ்ச்சியில் விழாவில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் பங்கேற்றார்.அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். வைத்தியலிங்கத்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சசிகலாவுடன் சந்திப்பு
மேலும் சாக்லேட்டுகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ் ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என தெரிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதனால் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் தேனி வட்டாரங்கள்.

எதார்த்தமான சந்திப்பு
இந்நிலையில் இன்று சசிகலாவை சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் கூறினாலும், வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தாய் எனவும், சின்னம்மா எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இன்று புரட்சி தாய் சின்னம்மா சந்தித்தது எதார்த்தமான சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது.

சசிகலா தினகரன்
அரசியல் ரீதியான சந்திப்பாக இருந்தால் கண்டிப்பாக அனைவரிடமும் தகவல் கொடுத்து தான் சந்திப்போம். அதிமுகவில் இருந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் அதில் சசிகலா தினகரன் ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆணவப் போக்கோடு நடந்து கொள்கிறார். அவரது ஆணவ போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழிக்க நினைக்கிறார்." என பேசினார். அதே நேரத்தில் ஓபிஎஸ் சசிகலாவை சந்திப்பதற்கான முன்னேற்பாடு தான் இந்த சந்திப்பு என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications