“கல்தா” கொடுத்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் கைது.. இன்னொருவருக்கு வலை வீசும் போலீசார்!
தஞ்சாவூர்: ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தஞ்சையில் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். இவர்கள் ஹெலிகாப்டரில் பந்தாவாக வலம் வந்ததால் "ஹெலிகாப்டர் சகோதரர்கள்" என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்து வந்தனர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் ஹேலிபேட் வைத்திருந்த இவர்கள், பாஜக பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்து வந்தனர். இருவரும் பாஜகவில் முக்கிய பொறுப்பையும் வகித்து வந்தனர். தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து, வசதியானவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தனர் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.
பணம் வசூல் செய்வதற்காக தனியாக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கும் பெரும் தொகையை கமிஷனாக வழங்கி கோடிக் கணக்கில் முதலீட்டை திரட்டினர். ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் கும்பகோணம், தஞ்சாவூர் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும் தாங்கள் பணம் கொடுத்த ஏஜென்ட்டுகளை நெருக்கத் தொடங்கினர். இதையடுத்து ஏஜென்ட்டுகள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவானதால் முதலீடு செய்தவர்கள் ஷாக் ஆகினர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பலரும் மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது பண மோசடி புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சிலரை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
அண்மையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கணேஷ், சுவாமிநாதன் மீது சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார். கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த அவர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே நிதி நிறுவன மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது மீண்டும் சென்னையில் மோசடி புகார் எழுந்த நிலையில், இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான சுவாமிநாதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தஞ்சையில் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கணேஷை தேடி வருவதாக கூறப்படுகிறது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications