மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்!
ஒரத்தநாட்டில் கொல்லப்பட்ட முதியவர், பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காக கொலை செய்யப்படவில்லை, இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் கொல்லப்பட்ட முதியவர், பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காக கொலை செய்யப்படவில்லை, இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன் நடந்த முதியவரின் கொலை ஒன்று தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 75 வயது நிரம்பிய இவர் கோபிநாத் என்று இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.

என்ன நடந்தது
கோவிந்தராஜ் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் புகைப்படம், ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பரபரப்பு
அப்போது இவர் கோபிநாத் என்ற இளைஞரால் தாக்கப்பட்டார். காயங்களுடன் வீட்டிற்கு சென்ற இவர் இரவு பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மிக மோசம்
இது தொடர்பாக இணையத்தில் அதிமுக - பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர். இந்த கொலையை செய்த கோபிநாத் திமுகவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஒரத்தநாடு போலீஸ்
இந்த நிலையில் இந்த கொலை குறித்து ஒரத்தநாடு போலீசார் திடுக்கிடும் உண்மைகளையே வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி கொல்லப்பட்ட கோவிந்தராஜுக்கு மனநலனில் சிறிய சிறிய பாதிப்புகள் இருந்திருக்கிறது. மனரீதியான சில பிரச்சனைகள் வயது முதிர்வு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

தேர்தல் இல்லை
இந்த நிலையில்தான் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார். அப்போது, அவர் கோபிநாத் வீட்டில் பிரச்சாரம் செய்த போது கோபிநாத்தை தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். அந்த இடத்தில் இருந்த மக்களும் இதை சாட்சியாக தெரிவித்து இருக்கிறார்கள் என்று போலீசார் கூறி உள்ளனர். தகாத வார்த்தையில் திட்டியதால் வாய் சண்டை பெரிதாகி உள்ளது. இதில் வந்த சண்டையில்தான் கொலை நடந்துள்ளது.

தொடர்பு இல்லை
அதேபோல் கொலை செய்த கோபிநாத் எந்த விதத்திலும் திமுகவுடன் தொடர்பு இல்லாதவர். திமுகவின் உறுப்பினர் கூட கிடையாது அவர். இது அரசியல் கொலை இல்லை, கோபத்தில் கோபிநாத் செய்த கொலை என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த எப்ஐஆரும் இதேபோலத்தான் பதியப்பட்டு இருக்கிறது.

எப்படி நடந்தது
தாக்குதலுக்கு உள்ளான கோவிந்தராஜ் முதலில் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கே அவரின் மகள் காயங்களை பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின் இரவில் சாப்பிட்டுவிட்டு படுத்த கோவிந்தராஜ் அப்படியே பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications