தஞ்சாவூரில் அதிசய வாழை மரம்.. மக்கள் ஆச்சர்யம்... அப்படி என்ன இருக்கு!
தஞ்சாவூர்: பொதுவாக மரத்தின் உச்சில் வாழைத்தார் போடும். ஆனால் மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்ட வாழை மரத்தை தஞ்சாவூரில் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவர் அதிமுக கட்சியில் தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார் இந்நிலையில் அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் பல ஆண்டுகளாக வாழை மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்
இந்த வாழைமரக்கன்றுகள் முற்றி மரமாகி தற்போது தார் போட்டுள்ளது மொந்தன் வாழைப்பழ ரகத்தை சேர்ந்த 10 அடி உயர வாழைமரம் மட்டும் மற்ற வாழை மரத்தை காட்டிலும் வித்தியாசமாக மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்டுள்ளது.
வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும் ஆனால் ஒரு சில மரங்கள் தான் மரத்தின் நடுவில் தார்போடும் அந்த வகையில் இந்த மரத்தின் நடுவே கிளை பிரிந்து தற்போது தார் போட்டுள்ளது இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து விட்டு செல்கிறார்கள்.
தொங்கும் கத்தி.. கலக்கத்தில் அரியர் மாணவர்கள்.. குட்நியூஸ் சொன்ன சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர்!