ரூ.11.09 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சென்னை: தஞ்சை மற்றும் சென்னையில் ரூ.11.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், சென்னை திருவொற்றியூரில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 5 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. மக்களவை இடைத்தேர்தலையொட்டி சுமார் 3.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியில் ஈடுப்பட உள்ளனர்.
[குமரியில் களமிறங்கி வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்!]
பயிற்சிக்கு வரும் ஊழியர்களிடம் தபால் வாக்குகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications