2 பேர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’.. மதுவில் கலந்திருந்த சயனைடு! கொலையா? தற்கொலையா?
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து பலியான விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு எதிராக அரசு அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூர், கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68), விவேக் (36) ஆகியோர் அங்கு மது குடிக்கச் சென்றனர்.

டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அருகில் இருந்த பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர். மது அருந்தி விட்டு வந்த குப்புசாமி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குப்புசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு மது அருந்திய விவேக்கும் மயங்கி விழுந்தார். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விவேக். பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலால் அதிகாரி பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் டாஸ்மாக் பார் இருக்கும் இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அனுமதி பெற்று இயங்கி வந்த பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் பார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பாரில் இருந்த மதுபானங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து பலியான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மதுவில் சயனைடு கலந்திருந்ததால் தான் இருவரும் உயிரிழந்துள்ளது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், அதில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை கொல்ல மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications