என் வயலில் உன் மாடு மேய்றதா? மாட்டின் காலை துண்டாக வெட்டி.. தஞ்சையில் நடந்த கொடூரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மேய்ந்த மாட்டின் காலை வயலின் உரிமையாளர் அரிவாளால் பாதி துண்டாக வெட்டினார். மாடு தற்போது நிற்கக்கூட முடியாமல் உயிருக்கு போராடி வருகிறது.
Recommended Video
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் , தஞ்சை போலீசில் புகார் அளித்த பின்னரே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளியே தெரிந்துள்ளது. இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர், நகலில் வசித்து வரும் ஆனந்த், இரண்டு காளை மாடுகள் வைத்துள்ளார். அந்த மாடுகளை வைத்த மாட்டு வண்டியும் வைத்து விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது காளை மாடான வண்டி மாடு ஒன்று வீட்டின் அருகில் உள்ள மந்திரி என அழைக்கப்படுபவரின் வயிலில் பயிர்களை மேய்ந்திருக்கிறது.

நடக்க முடியவில்லை
இதை பார்த்த வயலின் உரிமையாளரான மந்திரியின் மைத்துனர் காமராஜ், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் காளை மாட்டின் காலை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில், மாட்டில் கால் எலும்பு முறிந்து பாதி துண்டான நிலையில் இருந்தது. எழுந்து நடக்க முடியாத நிலையில், வயலில் அப்படியே சாய்ந்து கிடந்தது.

கண்ணீர் விட்டு கதறல்
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மாட்டின் கால் வெட்டப்பட்டுக் கிடப்பது குறித்து ஆனந்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், பதறித் துடித்தபடி ஓடிவந்து வெட்டுப்பட்டுக் கிடந்த மாட்டைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் ஆனந்த். மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று டாக்டரிடம் காட்டியிருக்கிறார்.

போலீசில் புகார்
மாட்டைப் பரிசோதித்த டாக்டர், கால் எலும்பு பலமாக சேதமடைந்துவிட்டது. இனி சரி செய்வது கடினம்' எனக் கூறியுள்ளார். தற்போது மாடு எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டு வருகிறது. ஆனந்த தனது மாட்டுக்கு ஏற்பட்ட நிலை குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
வயலில் மாடு மேய்ந்ததற்காக, மாட்டின் காலை வயலின் உரிமையாளர் அரிவாளால் பாதி துண்டாக வெட்டிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாயில்லா ஜீவன்களை இப்படி கொடுமைப்படுத்த எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது என்ற கேள்வி எழுகிறது. மிருகத்தனமான செயலில் ஈடுபட்டவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications