முட்டை, கருவாடு முக்கியமா.. இல்ல உயிர் முக்கியமா.. தஞ்சையில் சுற்றியோரை கேள்வி எழுப்பிய போலீஸ்
தஞ்சை: முட்டை, கருவாடு முக்கியமா இல்ல உயிர் வாழ்வது முக்கியமா என தஞ்சையில் லாக்டவுனின் போது சுற்றி திரிந்தவர்களை பிடித்த போலீஸார் அவர்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் யாரும் கூடாத வகையில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் முட்டை, கருவாடு முக்கியமா, உயிர்தான் முக்கியம்.

உயிர் இருந்தால் எல்லாம் சாப்பிட்டுக்கலாம் என அறிவுரை கூறி உறுதி மொழி எடுக்க வைத்து அனுப்பி வைத்தார். அவர்களை லத்தியால் தாக்காமல் தோப்புக்கரணம போட சொல்லி தண்டனை கொடுக்காமல் , நமக்கு உயிர்தான் முக்கியம், முட்டை , கருவாடு முக்கியம் இல்லை என அறிவுரை கூறி அனுப்பி வைத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.













Click it and Unblock the Notifications