Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை பெரிய கோவிலில் மாட்டிக்கொண்ட இந்திரா.. ஆடிப்போன ஊழியர்கள்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் இருக்கின்றன. இந்த சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல் இருக்கின்றன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை எண்ணும் போது, பெண் ஒருவர், யாரும் பார்க்காத வகையில் ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்தார். அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்து கோயில்களின் பட்டியலில் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோயிலாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக இருக்கிறது. இந்த விமானத்திற்குக் கீழே 11 அடி கனமான சுற்றுச்சுவருடன் கருவறை அமைந்திருக்கிறது.

Thanjavur big temple Woman arrested for stealing Rs 25 000 while counting money at temple undiyal


தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலை பொறுத்தவரை பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் ஆகும்.

உண்டியல் எண்ணும் பணி

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்டியல் பணம் எண்ணும் பணியை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

நைசாக திருடினார்

கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டு இருந்த நிலையில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், யாருக்கும் தெரியாமல் நைசாக ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்து கொண்டிருந்தார். பின்னர் தான் எவ்வளவு பணம் திருடியுள்ளோம் என்று பார்க்க ஆசைப்பட்ட அந்த பெண், பணத்தை எண்ணுவதற்காக மறைவான இடத்தை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி விழுந்திருக்கிறது. அதைப்பார்த்த கோவில் ஊழியர் வீரமணி, அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

கைதான இந்திரா

போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த போஸ் என்பவரின் மனைவி இந்திரா (வயது 60) என்பதும், உண்டியல் காணிக்கை ரூ.25 ஆயிரத்து 780-ஐ அவர் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. பணம் எண்ணும் பணியில் தன்னார்வலராக சேர்ந்த இந்திரா, முதல் முறையாக பெரியகோவிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+