தஞ்சை பெரிய கோவிலில் மாட்டிக்கொண்ட இந்திரா.. ஆடிப்போன ஊழியர்கள்.. சிக்கியது எப்படி?
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் இருக்கின்றன. இந்த சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல் இருக்கின்றன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை எண்ணும் போது, பெண் ஒருவர், யாரும் பார்க்காத வகையில் ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்தார். அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்து கோயில்களின் பட்டியலில் உள்ள தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோயிலாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக இருக்கிறது. இந்த விமானத்திற்குக் கீழே 11 அடி கனமான சுற்றுச்சுவருடன் கருவறை அமைந்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவிலை பொறுத்தவரை பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் ஆகும்.
உண்டியல் எண்ணும் பணி
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்டியல் பணம் எண்ணும் பணியை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
நைசாக திருடினார்
கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டு இருந்த நிலையில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், யாருக்கும் தெரியாமல் நைசாக ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்து கொண்டிருந்தார். பின்னர் தான் எவ்வளவு பணம் திருடியுள்ளோம் என்று பார்க்க ஆசைப்பட்ட அந்த பெண், பணத்தை எண்ணுவதற்காக மறைவான இடத்தை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி விழுந்திருக்கிறது. அதைப்பார்த்த கோவில் ஊழியர் வீரமணி, அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கைதான இந்திரா
போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த போஸ் என்பவரின் மனைவி இந்திரா (வயது 60) என்பதும், உண்டியல் காணிக்கை ரூ.25 ஆயிரத்து 780-ஐ அவர் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. பணம் எண்ணும் பணியில் தன்னார்வலராக சேர்ந்த இந்திரா, முதல் முறையாக பெரியகோவிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications