திரும்பி வந்தால் உடைந்து போவார்.. தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு.. பரபரப்பு!
தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது .
சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.
இன்னும் ஒரு வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன ஏற்பாடுகள்
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் அவரின் வீட்டை இடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சசிகலாவிற்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கிறது. முக்கியமாக மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் அதிக வீடுகள், இடங்கள் உள்ளது.

என்ன வீடு
இந்த நிலையில்தான் தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் அருகே மகர் நோன்பு சாவடி பகுதியில் அந்த வீடு இருக்கிறது. இது தொடக்கத்தில் தஞ்சாவூரில் சசிகலா வாழ்ந்த சொந்த வீடு ஆகும். இதை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

என்ன காரணம்
அந்த வீடு பழமையானதாக உள்ளது. பாதுகாப்பு இல்லை என்று கூறி இதை இடிக்க உள்ளனர். இதற்காக அந்த வீட்டில் இருக்கும் யாராக இருந்தாலும் அதை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்
தஞ்சாவூரில் பல பழைய வீடுகள் இருக்கிறது. ஆனால் சரியாக சசிகலா வீட்டை மட்டும் குறி வைத்து இப்படி செய்வது ஏன்? இதற்கு பின் பெரிய அரசியல் அழுத்தம் இருக்கிறது. சசிகலா திரும்பி வந்தால் மனம் உடைந்து போவார் என்று அவரின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications